தனது மகனை நாயகனாக அறிமுகம் செய்யும் இயக்குனர் முத்தையா- என்ன படம், புகைப்படத்துடன் இதோ
முத்தையா
கடந்த 2013ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டிப் புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் முத்தையா.
இப்படத்திற்கு பிறகு கார்த்தியை வைத்து கொம்பன், விஷாலை வைத்து மருது, சசிகுமாரை வைத்து கொடிவீரன், கவுதம் கார்த்தியுடன் தேவராட்டம், விக்ரம் பிரபுவுடன் புலிக்குத்தி பாண்டி மீண்டும் கார்த்தியுடன் விருமன் என இயக்கினார்.
ஆர்யாவுடன் கடைசியாக காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என தொடர்ந்து படங்களை இயக்கியுள்ளார்.
மகனை வைத்து படம்
இந்த நிலையில் இயக்குனர் முத்தையா தன்னுடைய புதிய படத்தை தனது மகன் விஜய் முத்தையாவை வைத்து இயக்க இருக்கிறாராம்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக விஜய் ஹீரோவாக நடிக்கப்போகும் இப்படத்தின் பூஜை அண்மையில் நடந்துள்ளது.இதோ பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்,