பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம்
மாவீரன் படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர் இயக்குனர் ராஜமௌலி. இதன்பின் நான் ஈ திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகிலும் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்று தந்தது.
தொடர்ந்து பல படங்களை இயக்கி வெற்றிகண்ட இயக்குனர் ராஜமௌலிக்கு பாகுபலி படத்தின் மூலம் இந்தியளவில் தனக்கென்று ஒரு இடத்தை சம்பாதித்தார்.
மேலும், தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரனை வைத்து ஆர்.ஆர்.ஆர் எனும் பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த இப்படம், கொரோனா காரணமாக தீடீரென தள்ளிப்போனது.
இயக்குனர் ராஜமௌலி கடந்த 2001ஆம் ஆண்டு ரமா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கார்த்திகேயா மற்றும் மயூகா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், இயக்குனர் ராஜமௌலி தனது அழகிய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
