விஜய் பட நடிகர் பணமோசடி.. புகார் அளித்த இயக்குனர்.
சாயாஜி ஷிண்டே தெலுங்கு, ஹிந்தி, மராத்தி போன்ற அணைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.
'பாரதி" என்ற படத்தில் சுப்ரமணி பாரதியாக சிறப்பாக நடித்திருந்தனால் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம். தோற்றத்திலும்,பேசும் விதத்திலும் பாரதியாகவே வாழ்ந்திருப்பார்.
விஜய் கூட்டணி
வேலகைக்காரன், வேலாயுதம், அழகிய தமிழ் மகன் போன்ற அடுத்துதடுத்த படங்களில் விஜயுடன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சாயாஜி ஷிண்டே.
பணமோசடி வழக்கு
சாயாஜி ஷிண்டே மீது இயக்குனர் சச்சின் காவல் நிலையத்திலும், மராத்தி திரைத்துறை கழகத்திலும் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நான் இயக்கும் மராத்தி படத்தில் சாயாஜி ஷிண்டே ஒப்பந்தம் ஆகியிருந்தார், என்னிடம் இருந்து அவருக்கு அட்வான்ஸ் 5 லட்சம் சம்பளமாக தந்துள்ளேன்.
படத்தின் கதை அம்சம் சரியாக இல்லை என கூறி படத்தில் இருந்து விலகிவிட்டார்.தற்போது என்னிடம் வாங்கிய ரூ.5 லட்சம் திருப்பித்தர மறுக்கிறார்.
படத்திற்கு இழப்பீடு
நடிகர் சாயாஜி ஷிண்டே படத்தில் இருந்து திடீரென விலகியதாலும் வாங்கிய பணத்தை திருப்பி தராததால் படத்திற்கு நிதி இழப்பு ஆகியுள்ளது, படம் வெளியாகவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆதலால், படத்திற்கான இழுப்பிடை நடிகர் சாயாஜி ஷிண்டே தர வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார், சாயாஜி ஷிண்டே மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகை கௌதமியின் மகளா இது.. கோலிவுட்டின் அடுத்த ஹீரோயின் ரெடி! வைரல் போட்டோஸ்