3 படங்களை பார்க்க ஆவலுடன் இருக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி.. என்னென்ன தெரியுமா?
எஸ்.எஸ்.ராஜமவுலி
தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி மக்களை வியப்பில் ஆழ்த்தியவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர் என அடுத்தடுத்து தான் இயக்கும் படங்களில் பிரம்மாண்டத்தை காட்டி வெற்றி இயக்குநராக வலம் வருகிறார்.
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது எல்லாம் கிடைக்க படக்குழுவினர் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் இருந்தனர்.
என்னென்ன தெரியுமா?
இந்நிலையில், ரசிகர்கள் முன்னிலையில் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜமவுலி, மூன்று தெலுங்கு படங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
அதாவது, ராம் சரணின் பெத்தி, பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் படம் மற்றும் பிரபாஸின் ஸ்பிரிட் ஆகிய படங்களை நோக்கி காத்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.