தமிழில் இந்த நடிகர்களை வைத்து இயக்க வேண்டும்.. புஷ்பா பட இயக்குநர் ஓபன் டாக்
சுகுமார்
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் நடிகர் சுகுமார். இவர் 2004-ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஆர்யா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது புஷ்பா திரைப்படம் தான். இப்படம் பல கோடி வசூல் செய்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து இதன் 2 - ம் பாகமும் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இதன் 3 - ம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஓபன் டாக்
இந்நிலையில், இயக்குநர் சுகுமார் சென்னையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தமிழில் படம் எடுத்தால் எந்த ஹீரோ வைத்து எடுப்பார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, எனக்கு தளபதி விஜய் வைத்து படம் இயக்க ஆசை. அவரை தொடர்ந்து அஜித்தை வைத்து படத்தை இயக்க வேண்டும். மேலும், நடிகர் கார்த்தியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை வைத்தும் ஒரு படம் இயக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu