விமானத்தில் தவறாக நடந்து கொண்ட நபர்.. செம அடி கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ்..
திவ்யா கணேஷ்
விஜய் தொலைக்காட்சியில் தற்போது வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ்.

இவர் பல செல்லமா, கேளடி கண்மணி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் திவ்யா கணேஷ் பேட்டி ஒன்றில் தன் வாழ்வில் நடந்த மோசமான சம்பவத்தை உடைத்து பேசியுள்ளார்.
தவறாக நடந்து கொண்ட நபர்
அவர் கூறியதில், படப்பிடிப்பு முடிந்து ஹைதராபாதிலிருந்து சென்னை வரும் விமான பயணத்தின் போது அவர் நன்கு தூங்கி கொண்டிருந்த சமயத்தில் ஒருவர் பின் சீட்டிலிருந்து தன் மீது கை வைத்தாராம். அதை அறிந்த திவ்யா அவரை பயங்கரமாக அடித்ததாக பேட்டியில் தெரிவித்தார். இவ்வாறு தவறாக நடப்பவர்களை சும்மா விட கூடாது என கூறி இருக்கிறார்.

மேலும், மீடியாவில் வெளிப்படையாக எதுவும் பேச முடியவில்லை காரணம் நான் ஒன்று சொன்னால் அதை வேறு விதமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் தான் பேட்டியில் கூட என்னால் எதையும் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஜீ தமிழின் சரிகமப சீசன் 3 நிகழ்ச்சியின் 4வது Finalist யார் தெரியுமா?- அட இவங்க தானா?