நடிகர்கள் விளம்பரத்துக்காக தான் இதெல்லாம் பண்றாங்களா? பிக் பாஸ் ஆரியின் அதிரடி பேட்டி
நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் நடிகர் ஆரி.
இப்படத்திற்கு பின் இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் கூட தற்போது வரை நினைவில் இருந்து நீங்காத இடத்தை நெடுஞ்சாலை படம் பிடித்துள்ளது.
சமீபத்தில் பிக் பாஸ் மூலமாக என்ட்ரி கொடுத்து, மீண்டும் மக்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்தி வருகிறார் ஆரி.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நம் சினிஉலகம் சேனலுக்கு பிக் பாஸ் ஆரி கொடுள்ள பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் ஆரியிடம் தொகுப்பாளர் கேட்ட கேள்வி : " நடிகர்கள் விளம்பரத்துக்காக தான் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளகிறார்களா ".
இதற்கு பதிலளித்த ஆரி : " கிடையாது, நம்மிடம் கொஞ்சம் நியாயம் இருந்தால் போதும், நம்மை மக்கள் புரிந்து கொள்ளவார்கள். அதே போல் அவர்கள் இடத்தில் இருந்தும் நாம் பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட நிகழ்வுகளை வைத்து அவர்களையும் பல பேர் ஏமாத்தியிருக்கிறார்கள் " என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியுள்ள பல சுவராஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ள பேட்டியை பாருங்கள்...