விலைமாது போல நடத்துறீங்க! கேவலபடுத்தாதீங்க! கொந்தளித்த சின்மயி! வெளுத்து வாங்கிய சம்பவம்!
தமிழ் சினிமாவில் முக்கிய பின்னணி பாடகியாக வலம் வந்த சின்மயியின் குரலையும் அவரின் முகத்தையும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு நீதி கேட்டு குரல் கொடுத்து வருகிறார். இது குறித்த அவரின் சமூக வலைதள பதிவுகள் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்துவண்டு.
அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஷிவானியின் அம்மா உள்ளே வந்தபோது தன் மகளின் நடவடிக்கைகளை கடுமையாக வெளிப்படையாக பேசினார். பாலாஜியுடன் சுற்றுவதை கண்டித்தார். இது பெரும் சர்ச்சையானது.
பக்குவமாக எடுத்துச்சொல்லியிருக்கலாம் என பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் சின்மயி இந்நிகழ்ச்சியை நான் பார்ப்பது இல்லை. அம்மா தன் மகளையே அசிங்கப்படுத்தியது போலிருக்கிறது., சின்ன விசயத்திற்காக மகளை விலை மாது போல நடத்தும் பழக்கம் சில பெற்றோர்களுக்கு இருக்கிறது. இதுபோன்று செய்யாதீர்கள், பொறுப்பாக பேசுங்கள் என பதிவிட்டுள்ளார்.