நான் இதை மட்டும் பொறுத்துக்க மாட்டேன்.. கொந்தளித்த நாக சைதன்யா
சமந்தா தான் காதலித்து திருமணம் செய்த நாக சைதன்யாவை சமீபத்தில் விவாகரத்து செய்தார். அவர்கள் பிரிவு சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது சமந்தா சமூக வலைத்தளத்தில் இருந்து விவாகரத்து போஸ்டை நீக்கி இருப்பதும் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தி இருக்கிறது.
மீடியாவில் இவர்கள் விவாகரத்து பற்றி பல்வேறு பரபரப்பான செய்திகள் தற்போதும் வந்துகொண்டு தான் இருக்கிறது. அது பற்றி நாக சைதன்யா கருத்து தெரிவித்து உள்ளார்.
"என்னை பற்றி என்ன செய்தி வந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் என் குடும்பம் பற்றி எதாவது தவறான செய்தி வந்தால் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதை மாற்ற விளக்கம் கொடுப்பேன். மரத்தில் பழம் இருந்தால் தான் அதன் மீது கல் வீசுவார்கள் என நான் எப்போதும் நினைத்துக்கொள்வேன்" என நாக சைதன்யா கூறி இருக்கிறார்.