விக்ரம் நெற்றியில் நாமமா.. பொன்னியின் செல்வன் சர்ச்சைக்கு பதில் சொன்ன இளங்கோ குமரவேல்! Exclusive Interview
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கு மிகப்பெரிய வாசகர் கூட்டம் ரசிகர்களாக இருக்கும் நிலையில் தற்போது அந்த நாவலை இயக்குனர் மணிரத்னம் பிரமாண்டமாக திரைப்படமாக்கி இருக்கிறார்.
பொன்னியின் செல்வன்
இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது. PS1 படத்தில் மணிரத்னத்துடன் ஸ்கிரிப்ட் பணிகளில் பணியாற்றியா நடிகர் இளங்கோ குமரவேல் பேட்டி அளித்து இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் கதையை தான் 10ம் வகுப்பு படிக்கும்போதே படித்து முடித்துவிட்டேன் என கூறிய அவர், அதை மேடை நாடகங்களிலும் நடித்து இருக்கிறாராம்.
இளங்கோ குமரவேல் பேட்டி
பொன்னியின் செல்வன் பற்றி நடிகர் இளங்கோ குமரவேல் அளித்திருக்கும் பேட்டியில் விக்ரம் நெற்றியில் இருந்த நாமம் சர்ச்சையானது பற்றி பேசி இருக்கிறார்.