ரிலீஸுக்கு தயாராகும் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படம், வெளியான புதிய அப்டேட்!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து சூர்யா இயக்குனர் பாண்டிராஜின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வந்தார்.
சூர்யா,வினய் ராய், பிரியங்கா மோகன், சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் என கலக்கல் காம்போவில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது முடிவடைந்துள்ளதாக இயக்குனர் பாண்டிராஜ் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து படத்தை வெளியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது. படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, D இமான் இசை அமைக்கிறார்.
#EtharkkumThunindhavan
— Pandiraj (@pandiraj_dir) November 10, 2021
Shooting wrapped up successfully !
I sincerely thank my production house @Sunpictures ,
our hero @Suriya_offl sir, @RathnaveluDop sir and my team for all the support extended ?
More updates coming soon ?#எதற்கும்துணிந்தவன் #ET