சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் நாள் வசூல் விவரம்- தமிழகத்தில் இவ்வளவா?
சூர்யா-பாண்டிராஜ் கூட்டணியில் உருவான எதற்கும் துணிந்தவன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
படம் பற்றிய தகவல்
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடிப்பில் திரையரங்கில் வெளியாகும் படம். கடைசியாக காப்பான் படம் 2019ம் ஆண்டு வெளியாகி இருந்தது.
அதன்பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் OTTயில் வெளியானது.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ், வினை, ஜெய் பிரகாஷ், தேவதர்ஷினி என பலர் நடித்துள்ளனர்.
படத்தின் முதல் நாள் வசூல் விவரம்
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் தமிழ்நாட்டில் முதல் நாள் முடிவில் ரூ. 6ல் இருந்து 7 கோடி வசூலித்துள்ளதாம். கேரளாவில் முதல் நாளில் ரூ. 1 கோடி வசூலித்துள்ளதாம்.
எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம்