சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. ரசிகர்களே உங்களுக்காக இதோ
பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாள் அன்று தான், இப்படத்தின் First லுக், Second லுக் மற்றும் third லுக் வெளியாகியிருந்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவடைந்துவிடும் என்று தெரியவந்துள்ளது.
அதுவும் இறுதியாக பாடல் காட்சி மட்டுமே படமாவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.