புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா?
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
தர்ஷன்-பார்கவி திருமணம் மறுபடியும் நடக்குமா, குணசேகரன் வழக்கில் இருந்து தப்பிப்பாரா, ஜனனி நியாயத்திற்கான போராட்டத்தில் ஜெயிப்பாரா அல்லது பிரச்சனை சிக்குவாரா என பல கேள்விகள் ரசிகர்களிடம் உள்ளது.
ஈஸ்வரி குணமாகி வந்தால் குணசேகரனுக்கு கண்டிப்பாக தண்டனை வாங்கி தருவார் என ஜனனி மிகவும் நம்பிக்கையாக இருந்தார், ஆனால் ஈஸ்வரி அனைத்தையும் மறந்ததால் அது குணசேகரனுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

புதிய சீரியல்
எதிர்நீச்சல் சீரியலில் ஞானம் மற்றும் நந்தினி கதாபாத்திரத்தில் ஹரிப்ரியா மற்றும் கமலேஷ் நடித்து வந்தனர்.

இப்போது இவர்கள் இருவரும் ஒன்றாக புதிய சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளனர். ஜெயா டிவியில் ஒளிபரப்பாக போகும் பாளையத்து அம்மன் என்ற தொடரில் கமலேஷ் மற்றும் ஹரிப்ரியா நடிக்க கமிட்டாகியுள்ளார்களாம்.
வரும் மே 18ம் தேதி முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.
பட்டு வேட்டி சட்டையுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? IBC Tamilnadu
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri