புதிய குணசேகரனை தேர்வு செய்வதில் விருப்பம் இல்லாமல் எதிர்நீச்சல் குழு- அதிரடி மாற்றம், என்ன தெரியுமா?
எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல், கோலங்கள் சீரியல் புகழ் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு ஹிட் தொடர்.
இந்த தொடர் கதைக்களம், வசனங்களை தாண்டி ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்துவிற்காகவும் மக்களிடம் தொடர் வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.
இந்த தொடர் மூலம் 30 வருட சினிமா வாழ்க்கையில் கிடைக்காத சந்தோஷத்தை அனுபவித்துள்ளார் மாரிமுத்து.
ஆனால் அதனை முழுவதும் கொண்டாட முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். அவரது இறப்பு அனைவருக்குமே பெரிய துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.
புதிய பிளான்
அடுத்த ஆதி குணசேகரனாக நடிக்கப்போவது இவர்கள்தான் என வேல ராம மூர்த்தி, பசுபதி, ராதா ரவி போன்ற நடிகர்களின் பெயர்கள் வலம் வந்தன, ஆனால் எதுவும் உறுதியாகவில்லை.
இந்த நிலையில் சீரியல் குழு தரப்பில் இருந்து ஒரு தகவல் கசிந்துள்ளது. ஆதி குணசேரகன் கதாபாத்திரத்தை விட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார் என்பதோடு நிறுத்தி வைத்துவிட்டு புதிய கதாபாத்திரத்தை கொண்ட வர முடிவு செய்துள்ளார்களாம்.
ஆதி பகவான் என்ற கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து அவரை வைத்து கதையை நகர்த்த முடிவு செய்துள்ளார்களாம்.

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
