சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா?
எதிர்நீச்சல் தொடர்கிறது
குணசேகரன், அவரது வீட்டுப் பெண்கள் குண்டாஸ் சட்டம் போடும் அளவிற்கு நிறைய குற்றங்களை செய்தவர். ஆனால் இதுவரை ஒரு குற்றத்திற்கு கூட தண்டனை அனுபவிக்காதவர்.
ஆனால் வாழ்க்கையில் முன்னேறி மற்ற பெண்களையும் அவர்களது வாழ்க்கையில் வெற்றிக்காண வைக்க வேண்டும் என போராடும் ஜனனி மட்டும் அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்த வண்ணம் உள்ளார்.

இப்போது அவர் கர்ப்பமாக இருப்பதால் அவரை சந்தோஷமாக வைத்துக்கொள்ள கொடைக்கானல் அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு ஜனனி எதிர்ப்பாரா வண்ணம் தேவசகாயம் இருக்கிறார், ஜனனி அழிக்க அவர் பிளானும் போட்டுள்ளார்.
தேவசகாயம் கொடைக்கானலில் இருப்பதை தெரிந்துகொண்ட ஜனனி பயப்பட சக்தி அவரை சமாதானப்படுத்துகிறார்.

வேண்டுகோள்
சன் டிவியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பல வருடங்களாக இரவு 9.30 மணிக்கு தான் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரவு 10 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது.
ஆனால் அந்த நேரம் சரியில்லை, 9 அல்லது 9.30 மணிக்கு தொடரை மாற்ற வேண்டும் என எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள் சன் தொலைக்காட்சிக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.