நந்தினி, ரேணுகாவை கோபமாக Left Right வாங்கிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
குணசேகரனுக்கு தண்டனை கிடைக்குமா இல்லையா என்ற பெரிய கேள்வியோடு எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கதைக்களம் நகர்கிறது.
குணசேகரனுக்கு தனது வீட்டுப் பெண்கள் அனைவரும் எப்போதுமே ஒன்றுமையாக உள்ளார்கள், அவர்களை பிரித்தே ஆக வேண்டும் என நிறைய போராடியுள்ளார். இப்போது அதற்கான விஷயம் தான் நடந்துள்ளது.
ஈஸ்வரி எல்லா விஷயத்தையும் மறந்ததால் அவர் குணசேகரனுக்கு ஆதரவாக பேசி வருகிறார், ஆனால் நந்தினி-ரேணுகா ஏன் அமைதியாக உள்ளார்கள் என்ற கேள்வி ரசிகர்களுக்கே உள்ளது.

புரொமோ
தற்போது இன்றைய எபிசோட் புரொமோவில், ஜனனி கோபத்தின் உச்சத்தில் நந்தினி-ரேணுகாவிடம் பேசுகிறார்.

இங்கு என்னென்ன நடந்தது, குணசேகரன் என்னவெல்லாம் செய்தார் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும், அப்புறம் எதற்கு எதுவும் பேசாமல் உள்ளீர்கள். நீதிமன்றம் பக்கம் கூட வரவில்லை, நீங்கள் வந்து பேசலாம் தானே.
நீங்கள் எப்படியோ ஆனால் நான் குணசேகரன் தவறு செய்ய அவருக்கு ஆதரவாக இருக்கும் கதிர்-ஞானம் இவர்கள் 3 பேருக்கும் தண்டனை வாங்கி தராமல் ஓயமாட்டேன் என கூறுகிறார்.