குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் முதல் சீசன் முடிவடைந்து 2வது சீசனாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
கதையில் இப்போது எப்போதும் வீட்டுப் பெண்களுக்கு ஆட்டம் காட்டம் குணசேகரன், 2.0 ஆக மாறி வேறு மாதிரி நடக்கிறார். யாரையும் குறை கூறாமல் எப்போதும் வீட்டில் இருக்கிறார்.

ஈஸ்வரி வீட்டிற்கு வந்ததும் ஏதாவது பிரச்சனை கிளம்பும் என்று பார்த்தால் அவரும் எல்லாவற்றையும் மறக்க குணசேகரன் மனைவியிடம் ஆசையாக பேசி வருகிறார். ஆனால் அவர் என்ன பிளானில் உள்ளார், எதற்காக இப்படி அமைதி காக்கிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

புரொமோ
தற்போது இன்றைய எபிசோடின் புரொமோவில், வக்கீல் வீட்டிற்கு வந்து உங்கள் அண்ணன் வீட்டில் இருக்க வேண்டுமா அல்லது ஜெயிலில் இருக்கனுமா என்பது உங்கள் கையில் தான் உள்ளது என கதிர் மற்றும் ஞானத்திடம் கூறுகிறார்.

பின் குணசேகரன் ஈஸ்வரியிடம் வெளியே போக வேண்டும் என கூற அவர் எல்லோரும் போகிறோமா என்கிறார், ஆனால் அவர் இல்லை நாம் இருவர் மட்டுமே செல்கிறோம் என கூற நந்தினி-ரேணுகா ஷாக் ஆகிறார்கள்.
கடைசியாக மதிவதனி வீட்டிற்கு ராணா என்ட்ரி கொடுக்கிறார், அடுத்து என்ன ஆகுமோ பொறுத்திருந்து காண்போம்.
You May Like This Video