அருகில் வந்த போலீஸ்.. நடுங்கும் குணசேகரன், தம்பிகள்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தற்போது தம்பிகள் உடன் தலைமறைவாக காரில் ஊர் ஊரக சுற்றிக்கொண்டிருக்கிறார்.
கைதுக்கு பயந்து அவர்கள் தலைமறைவாக இருக்கும் நிலையில், மீண்டும் மதுரைக்கு வரும்போது நமக்கு எதிரி என யாரும் இருக்க கூடாது என குணசேகரன் வில்லத்தனத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்.

இன்றைய ப்ரோமோ
சக்தி சிகிச்சை பெற்று தேறி வரும் நிலையில் குணசேகரன் தர்ஷன் - அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்தது பற்றி ஜனனி சொல்கிறார்.
மறுபுறம் குணசேகரன் & தம்பிகள் சென்ற கார் போலீஸ் இருக்கும் பகுதியில் செல்லும்போது மாட்டிக்கொள்கிறார்கள். சிக்கிக்கொண்டால் நிச்சயம் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்வார்கள் என பயந்து நடுங்குகின்றனர்.
அவர்களை போலீஸ் கண்டுபிடித்து கைது செய்யுமா? ப்ரோமோவை நீங்களே பாருங்க.