கோபத்தில் குணசேகரன் பற்றிய உண்மையை கூறிய சக்தி, ஷாக்கில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
ஒரு விஷயம் கிடைத்துவிட்டால் அதை வைத்த எவ்வளவு கதையை இழுக்க முடியுமோ அந்த அளவிற்கு கொண்டு சென்று அட சே முடிங்கப்பா என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு இப்போது பல சீரியல்களின் கதைக்களம் இருக்கிறது.

அப்படி திருச்செல்வம் அவர்கள் இயக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கதைக்களம், கொலை, கடத்தல், பெண் அடிமை, ஆணாதிக்கம், வில்லன் தப்பிப்பது, நியாயமாக போராடுபவர்கள் பிரச்சனையில் சிக்குவது என இப்படியே ஒரே மாதிரியான கதையுடன் செல்கிறது என ரசிகர்கள் புலம்பி தள்ளிவிட்டனர்.
கதையில் இப்போது குணசேகரன் வழக்கில் அவருக்கு எதிராக இருக்கும் ஆதாரம் தான் தர்ஷினி. அவரை இப்போது யாரோ கடத்தி வைத்து அந்த பழியை ஜனனி மீது போட்டுள்ளனர்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், ஈஸ்வரி தர்ஷினி காணாமல் போனதில் இருந்து அழுதுகொண்டே இருக்கிறார். இன்னொரு பக்கம் ஜனனி, தர்ஷினியை தேடி அலைந்துகொண்டிருக்கிறார்.

இப்போது ஜனனியை காணவில்லை, சக்தி அந்த கோபத்தில் வீட்டிற்கு வந்து தனது அண்ணனிடம் ஜனனி காணவில்லை அதற்கு நீங்கள் தான் காரணம். எங்கே அவள் என கோபமாக கேட்கிறார்.
பின் நீங்கள் ஈஸ்வரி அண்ணியை கொடூரமாக தாக்கிய வீடியோ என்னிடம் சிக்கிவிட்டது என கூற குணசேகரனை தாண்டி ஈஸ்வரியும் ஷாக் ஆகிறார்.
இதோ சீரியலின் புதிய புரொமோ,
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை: மெழுகுவர்த்தி பஞ்சாயத்து தொடர்பில் மேயர் பிரியா விளக்கம்! IBC Tamilnadu