எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இப்போது பிரச்சனையே ஈஸ்வரி தான்.
எல்லா விஷயத்தையும் மறந்ததால் நம்பிக்கையாக இருந்த ஜனனி எண்ணத்தில் கல்லை தூக்கிப்போட்டுவிட்டார். ஈஸ்வரி எல்லாவற்றையும் மறந்ததால் குணசேகரன் அவரை தன் பக்கம் இழுத்துவிட்டார்.
முழுமையாக குணசேகரன் மனைவியாக மாறி நிற்கிறார் ஈஸ்வரி. கடைசி எபிசோடில், ஜனனி குணசேகரன் பற்றி ஈஸ்வரி மறந்த எல்லா விஷயத்தையும் கூறுகிறார், ஆனால் அவர் அதை ஏற்பதாக தெரியவில்லை.

புரொமோ
இன்றைய எபிசோடின் புரொமோவில், நான் சொன்னதை எல்லாம் வைத்து ஒரே ஒரு Statement கொடுத்தால் குணசேகரன் ஆட்டம் முடிந்துவிடும் என ஜனனி கூறுகிறார்.

ஈஸ்வரியோ, எனக்கு அவர் எப்படிப்பட்டவர், என்னை எப்படி நடத்தினார் எல்லாம் நியாபகம் இருக்கு என கூறுகிறார்.
பின் ஏதோ ஒரு நம்பரில் இருந்து வந்த விஷயத்தை காட்டி ஜனனியிடம் கேட்கிறார். அப்படி என்ன விஷயம் எல்லாம் இன்று காண்போம்.