குணசேகரனுக்கு எதிராக ஜனனி போட்ட திட்டம், சக்தி கிடைத்த ஆதாரம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
குணசேகரன் ஈஸ்வரி வழக்கில் இருந்து தப்பிக்க மொத்தமாக மாறி நாடகம் ஆடி வருகிறார். எல்லாவற்றையும் மறந்த ஈஸ்வரி முன் நல்லவர் போல் நாடகம் ஆடி இப்போது மொத்தமாக குணசேகரன் அவரை தன் வழிக்கு கொண்டு வந்துவிட்டார்.
ஜனனி சொன்ன உண்மைகளை நம்ப மறுக்கும் ஈஸ்வரியால் குடும்பமே குணசேகரனை தாண்டி ஷாக்கில் உள்ளனர்.
இந்த வழக்கின் முக்கிய ஆதாரமே வீடியோ தான், அதுவும் ஜனனியிடம் இதுவரை கிடைக்கவில்லை.

புரொமோ
தற்போது இன்றைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது. வீட்டிற்கு வந்த சக்தியிடம் எல்லோரும் கேள்வி கேட்க அவர் வீடியோ தேடி தான் வெளியே சென்றேன். அலைந்ததுக்கு பலனாக என்ன கிடைக்கனுமோ அது என் கைக்கு கிடைத்துவிட்டது என்கிறார்.
இன்னொரு பக்கம் சாருபாலா இப்போது கல்யாணத்தை காரணம் காட்டுவார்கள் என கூற ஜனனி கல்யாணத்தை தள்ளிப்போட நான் ஏற்பாடு செய்கிறேன் என்கிறார்.