தர்ஷினி பிரச்சனைக்கு இடையில் கதிர் சட்டையை பிடித்து சண்டை போட்ட அறிவுக்கரசி... பரபரப்பான எதிர்நீச்சர் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
தர்ஷினி எங்கே போனார், அவரை கடத்தியது யார் என்பதை வைத்து இப்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
கடைசி எபிசோடில், குணசேகரன் தர்ஷினியை தேடி வெளியே செல்ல அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது, ஆனால் எப்படியோ தப்பித்துவிட்டார். இன்னொரு பக்கம் விசாலாட்சி, ஜனனி நல்லவள் தான் என அவருக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
இன்னொரு பக்கம் தர்ஷினியை தேடிய வேட்டையில் ஜனனி இறங்கியுள்ளார்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், அறிவுக்கரசியின் அப்பா இறந்துவிட்டார் என தெரிகிறது. அறிவுக்கரசி வீட்டில் இருப்பவர்களை அழைக்க கதிர், வாழ வேண்டிய புள்ள காணும் என்று இருக்கிறோம், நீ இழுத்துக் கிடந்தவர் இறந்துவிட்டார் என எங்களை வரச் சொல்கிறாயா என கேட்கிறார்.

அதைக்கேட்டு அறிவுக்கரசி, கதிர் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார். அந்த பிரச்சனைக்கு இடையில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த குணசேகரன் தனக்கு இப்படி ஆனதற்கு டிரைவர் காரணம் இல்லை அவன் அம்பு தான், இதற்கு காரணமானவர் மறைந்துள்ளார் என ஜனனியை மறைமுகமாக கூறுகிறார்.
அதேபோல் ஜனனி, தர்ஷினி இருக்கும் இடத்தை நெருங்கிவிட்டார் என தெரிகிறது.