கிளம்ப தயாராக இருந்த ஜனனிக்கு ஷாக் கொடுத்த குணசேகரன், ராணா செய்த செயல்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
குணசேகரன் கட்டு கட்ட வேண்டும், அப்படி செய்தால் குடும்பத்திற்கு எதிராக இருப்பவர்கள் அழிவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
இதனால் வழக்கம் போல் பல நாடகங்கள் நடத்தினார், தம்பிகளையும் தம் பக்கம் வர வைத்தார். இதற்கு இடையில் ராணா செய்த சூழ்ச்சியால் குணசேகரன் ஜாமின் கேன்சல் ஆக அவர் போலீஸிடம் சிக்க கூடாது என தப்பித்தார்.
ஆனால் போலீஸிடம் சிக்குவது போல் காட்சி அமைந்தது, அதற்குள் தப்பித்துவிட்டார்.
இதற்கு இடையில் வீட்டில் விசாலாட்சி கேட்டுக் கொண்டது போல் ஜனனியின் வளைகாப்பு கொண்டாட்டமாக நடந்தது, எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.

புரொமோ
தற்போது இன்றைய எபிசோடின் புரொமோ வந்துள்ளது. அதில், இந்த வீட்டைவிட்டு கிளம்பு முடிவு எடுத்து சக்தி-ஜனனி வெளியே வருகிறார்கள். அந்த நேரம் திடீரென குணசேகரன் என்ட்ரி கொடுக்கிறார்.
அவர் அனைவரிடமும் கட்டு கட்டும் விஷயம் குறித்து கூற யாரும் முன்வரவில்லை. அந்த நேரம் வந்த ராவணன் நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்கிறார். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றானதும் செம கோபத்தில் உள்ளார் குணசேகரன்.