ஈஸ்வரிக்கு அதிரடியாக சவால் விட்ட ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போது பார்கவி மற்றும் தர்ஷன் திருமண விவகாரத்தில் ஈஸ்வரி மற்றும் ஜனனி இடையே பெரிய மோதலாக மாறி இருக்கிறது.
ஏற்கனவே பார்கவி திருமணம் வேண்டாம் என சொல்லி பையை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்ட நிலையில், அன்புக்கரசியை தர்ஷனுக்கு திருமணம் செய்துவைக்க வில்லி அறிவுக்கரசி காய் நகர்த்துகிறார்.
ஆனால் முடிவு எடுக்கும் அதிகாரம் ஈஸ்வரிக்கு மட்டும் தான் இருக்கிறது என குணசேகரன் கூறிவிடுகிறார். ஈஸ்வரி திருமணத்திற்கு ஓகே சொல்ல மறுக்கிறார்.

சவால் விடும் ஜனனி
நீங்க எடுத்த முடிவு தப்பு என ஜனனி ஈஸ்வரியை பார்த்து சொல்ல, அது என் முடிவு என திமிராக பதில் சொல்கிறார் அவர்.
"அது போல இது என் முடிவு, உன் புருஷனுக்கு தண்டனை வாங்கி கொடுக்காம விடமாட்டேன்" என ஜனனி சவால் விடுகிறார். ப்ரோமோவை பாருங்க.