மொத்தமாக பழைய நினைவை இழந்த ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஈஸ்வரி கோமாவில் இருந்து எழ போகிறார் என கடந்த ஒரு வாரமாக கூறி வந்த நிலையில், சொன்னபடியே அவரும் மீண்டு வந்திருக்கிறார்.
ஆனால் அவர் பழைய நினைவுகளை இழந்துவிட்டது போல தான் காட்டப்டுகிறது. அதனால் அவரை தாக்கி கோமாவுக்கு அனுப்பிய குணசேகரனை பற்றி ஈஸ்வரி எதுவும் செய்ய போவதில்லை, மறுபடியும் மொதல்ல இருந்தா.. என நெட்டிசன்கள் சீரியல் இயக்குனரை விமர்சிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

இன்றைய ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் எதிர்நீச்சல் 2 இன்றைய ப்ரோமோ வீடியோவில் அம்மா தன்னையும் மறந்துவிட்டு இருப்பார் தானே என பார்கவி கண்ணீர் விடுகிறார்.
இந்த சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் ஒரு நாள் மாறும் என குணசேகரனை மற்ற பெண்கள் எச்சரிக்கின்றனர்.
அதன் பின் ஈஸ்வரி நேராக குணசேகரனிடம் சென்று தான் உங்களிடம் பேச வேண்டும் என சொல்கிறார். ப்ரோமோவை பாருங்க.