தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

By Yathrika Sep 29, 2025 04:42 AM GMT
Report

எதிர்நீச்சல் தொடர்கிறது

ஒரு திருமணம் கடந்த சில நாட்களாகவே பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நடந்து வருகிறது. 

தர்ஷனுக்கு குணசேகரன் நினைத்தது போல் திருமணம் நடக்குமா அல்லது ஈஸ்வரி ஆசை போல் நடக்குமா என்பது தான் விறுவிறுப்பின் உச்சமாக செல்கிறது.

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ | Ethirneechal Thodargiradhu Promo 29 Sep 2025

கடந்த வாரம் எபிசோடில் ஒரு உயிரிழப்பு நடந்துவிட்டது, அதாவது வீடியோ வைத்து மிரட்டிய நபரை கொலை செய்துவிட்டார் அறிவக்கரசி. இன்னொரு பக்கம் ஜனனி, ஜீவானந்தம், பார்கவியை கொலை செய்ய குணசேகரன் அடியாட்கள் ஏற்பாடு செய்ய தற்போது அந்த 3 பேரும் தப்பித்துவிட்டார்கள்.

அடுத்து என்ன நடக்கும், தர்ஷன் திருமணம் எப்படி நடக்கும் என்பது தான் பெரிய கேள்வியே.

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ | Ethirneechal Thodargiradhu Promo 29 Sep 2025

புரொமோ

இன்றைய எபிசோட் புரொமோவில், சக்தி, நந்தினி, ரேணுகா 3 பேரும் தர்ஷனை அழைத்துக் கொண்டு தப்பிக்கும் போது குணசேகரன் மற்றும் அவரது குழுவினர் பார்த்துவிடுகின்றனர்.

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ | Ethirneechal Thodargiradhu Promo 29 Sep 2025

கோபத்தில் குணசேகரன் தர்ஷனை சரமாரியாக அடிக்கிறார். பின் சக்தியிடம் நீ உண்மையான ஆம்பளையா இருந்தா திருமணத்தை தடுத்துப்பார் என சவால் விடுகிறார்.

அடியாட்களிடம் இருந்து தப்பித்த ஜனனி மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கியது போல் தெரிகிறது. இதோ இன்றைய எபிசோட் பரபரப்பு புரொமோ,


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US