அறிவுக்கரசியிடம் இருந்து தப்பித்து வேறொருவரிடம் சிக்கிய தர்ஷன்... எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல்
கோலங்கள் சீரியல் புகழ் திருச்செல்வம் இயக்கத்தில் இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் எதிர்நீச்சல்.
4 பெண்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் இன்னும் குணசேகரன் வீட்டுப் பெண்கள் அடிமையாகவே உள்ளனர், வெளியே வருவது போல் தெரியும் நேரத்தில் மீண்டும் ஆணாதிக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார்கள்.
புரொமோ
தற்போது தர்ஷன் வீட்டைவிட்டு ஓடிப்போக அவர் இருக்கும் இடத்தை அறிவுக்கரசி ஆட்களை வைத்து கண்டுபிடிக்கிறார்.
தர்ஷன் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடும் நேரத்தில் ஜீவானந்தம் கண்ணில் பட அவரின் காரில் ஏறிவிடுகிறார். அதில் பார்கவி மற்றும் அவரது அப்பா உள்ளார்கள்.
தர்ஷனை காரில் கண்ட பார்கவியின் அப்பா கழுத்தை பிடித்து இழுத்து தனது கோபத்தை வெளிக்காட்டுகிறார்.