கரிகாலன் சொன்ன வார்த்தை பளார் விட்ட நந்தினி.. ஷாக்கில் விசாலாட்சி, எதிர்நீச்சல் புரொமோ
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் பெண் அடிமை, ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை பேசும் தொடராக ஒளிபரப்பாகி வந்தது எதிர்நீச்சல் சீரியல்.
திருச்செல்வம் அவர்கள் இயக்கிய இந்த தொடரின் முதல் பாகம் செம ஹிட்டாக ஓடியது, மாரிமுத்து அவர்களின் மறைவிற்கு பிறகு கொஞ்சம் டல் அடிக்க முதல் பாகத்தை முடித்தார்கள்.
பின் சில மாதங்களிலேயே அடுத்த பாகத்தை சில நடிகர்கள் மாற்றத்துடள் ஒளிபரப்பாக தொடங்கியது. ஆனால் 2ம் பாக ஆரம்பத்தில் இருந்து வரும் கதை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என நன்றாக தெரிகிறது.
என்ன காரணம் மீண்டும் குணசேகரன் வீட்டுப் பெண்கள் அடிமையாகியுள்ளது தான்.
புரொமோ
இப்போது கதைக்களத்தில் தாராவின் நிகழ்ச்சி வைத்து பிரச்சனை செல்கிறது.
அறிவுக்கரசி இந்நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என குணசேகரன் என்னென்னவோ பிளான் செய்ய நந்தினி அவர் வரவே கூடாது என போராடி வருகிறார். இன்றைய எபிசோட் புரொமோவில் கரிகாலன் வழக்கம் போல் பேசி நந்தினியிடம் பளார் என அறை வாங்குகிறார்.
அப்படி என்ன தான் சொன்னார் என்பதை புரொமோவில் காணுங்கள்,