எல்லாத்தையும் மறந்த ஈஸ்வரிக்கு தெரியவந்த முக்கிய உண்மை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
கடந்த சில வாரங்களுக்கு முன் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருந்தார்கள்.
காரணம் குணசேகரன் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி குணமாக அவர் நீதிமன்றத்தில் வந்து தன்னை தாக்கியது யார் என்ற உண்மையை கூறுவார் என ஜனனி, நந்தினி, ரேணுகா எதிர்ப்பார்த்தார்கள்.

வீடியோவும் அவர்களது கையில் இல்லாததால் ஈஸ்வரியை மலைபோல் நம்பினார்கள். ஆனால் அவருக்கு பழைய விஷயங்கள் எல்லாம் மறந்து போக இது குணசேகரனுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
ஈஸ்வரி சகஜமாக குணசேகரன் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருப்பது ஜனனிக்கு தாங்க முடியாத மன உளைச்சலை கொடுத்து வருகிறது.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், தர்ஷன் பார்கவியிடம் தங்களது வாழ்க்கை குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது தர்ஷினி வந்து நீங்கள் இருவரும் தனியாக பேசுவதை பார்த்தால் சந்தேகம் வரும் என்கிறார்.

ஆனால் தர்ஷன் பார்கவியிடம் நமக்கென்று வாழ்க்கை இருக்கிறதா இல்லையா என கோபமாக கேட்க அந்த நேரம் ஈஸ்வரி பார்த்துவிடுகிறார். பின் எல்லோரிடமும் பார்கவி யார் என்று கேட்க தர்ஷினி அவள் தர்ஷனின் மனைவி என கூறுகிறார்.

அதைக்கேட்டு ஈஸ்வரி ஷாக் ஆகிறார், இனி என்ன நடக்கப்போகிறது என்பதை வரும் நாட்களில் காண்போம்.