தர்ஷனை அடித்த ஈஸ்வரி, ஜனனிக்கு வந்த ஷாக்கிங் போன் கால், ராணா செய்தது என்ன?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
தர்ஷன்-பார்கவி திருமணத்தை பார்க்க வேண்டும் என ஈஸ்வரி ஆசைப்பட அதற்கான ஏற்பாடுகள் வீட்டிலேயே ஏற்பாடு செய்தார்.
அதற்கான வேலைகள் நடந்த போதே வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனை, குணசேகரன் வழக்கு வேறு இதற்கு நடுவில் பரபரப்பாக சென்றது. தர்ஷன் தாலி கட்டும் நேரத்தில் பார்கவி எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்கிறார்.

எங்களுக்குள் நல்ல புரிதல் இல்லை, அப்பத்தா, ஈஸ்வரி அம்மா, ரேணுகா, நந்தினி ஆகியோர் போல வீட்டிலேயே முடங்கிக்கிடக்க முடியாது. எனது கனவு எல்லாம் வேறு தர்ஷன், என்னால் உன் மனைவியாக வாழ முடியாது என கூறி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
தனக்கு என்ன வேண்டும் என்பதை புரிந்துகொண்டு பார்கவி எடுத்த முடிவை நினைத்து ஜனனி சந்தோஷப்பட்டார்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், அறிவுக்கரசி, தனது தங்கையை திருமணம் செய்தே ஆக வேண்டும் என ஏதேதோ பேசுகிறார். அதில் கோபமான ஈஸ்வரி, பார்கவி வீட்டில் இருக்கிறாள், அன்புக்கரசி ஆபிஸில், இருவரையும் பேலன்ஸ் செய்யலாம் என்று நினைத்தாயா என தர்ஷனை அடிக்கிறார்.

இதற்கு இடையில், இத்தனை நாள் சைலன்டாக குணசேகரன் வீட்டில் பிரச்சனை ஏற்படுத்தி வந்த ராணா ஜனனிக்கு போன் செய்து என்ன ஈஸ்வரி உனக்கு எதிராக திரும்பிவிட்டாரா என கேட்கிறார்.
உடனே ஜனனி இத்தனை நாள் மதிவதனி கார், வீடு என எல்லாம் இடத்திலும் கேமரா வெச்சது நீதானா என கோபப்படுகிறார்.