என்ட்ரி கொடுக்கும் புதிய நடிகர்கள், மாறப்போகும் கதை... எதிர்நீச்சல் சீரியல் குறித்து சூப்பர் அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட சீரியல் தான் எதிர்நீச்சல்.
திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியலின் 2ம் பாகம் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. 2 சீசன்கள் சேர்த்து சீரியல் 1160 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி இருக்கிறது.
ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி என்ற 4 பெண்களின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக கொண்டு தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

அடுத்த கதைக்களம்
தற்போது சீரியலில் குணசேகரன் தனது சொத்தை எல்லாம் தம்பிகள் கதிர் மற்றும் ஞானம் பெயருக்கு மாற்றிவிட்ட கதைக்களம் தான் செல்கிறது.
தன்னை தவிர வேறுயாரும் நன்றாக இருக்க கூடாது என யோசிப்பவர் எப்படி சொத்தை தம்பிகளுக்கு கொடுப்பார், இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என ஜனனி யோசிக்கிறார்.

இந்த நிலையில் சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கும் பார்வதி சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போவது என்ன என கூறியுள்ளார்.

அதில் அவர், நிறைய புதிய புதிய டுவிஸ்ட், புதிய நடிகர்கள் வரப்போகிறார்கள். மொத்தமாக கதை அப்படியே மாறப்போகிறது அவ்வளவு தான் சொல்ல முடியும். என்ன நடக்கப்போகிறது என்பதை நீங்கள் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என்கிறார்.