எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் பெண்கள் எழுச்சிக்கான கதையாக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கதைக்களம் வர வர பெண்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து வருகிறது.
பெண்கள் வாழ்க்கையில் முன்னேற ஒரு அடி எடுத்து வைத்தால் வில்லன் குழு 10 அடி கொடுத்து கீழே இறக்கி விடுகிறார்கள்.

அதே பெண்கள் வில்லன்களுக்கு ஒரு அடி கொடுக்க பெரிய போராட்டமே செய்தாலும் அசால்ட்டாக அதில் இருந்து தப்பித்து மேலே வந்துவிடுகிறார்கள்.
புரொமோ
குணசேகரன் தன் மீது விழுந்து குண்டாஸ் சட்டத்தை கேன்சல் செய்து இப்போது கெத்தாக வீட்டிற்குள் வந்துவிட்டார். அவர் வரும்போதே ஜனனியை தீர்த்துகட்ட எல்லா வேலைகளையும் செய்துவிட்டு வந்துள்ளார்.
ஆனால் ஜனனி எப்படியோ ரவுடிகளிடம் இருந்து தப்பித்துவிடுகிறார். இன்னொரு பக்கம் தம்பிகளை தூண்டிவிட்டு அவர்களது மனைவியை அருத்துவிட பிளான் செய்துவிட்டார். இன்றைய எபிசோடில், ஊர்க்காரர்கள் அனைவரும் வர நந்தினி, ரேணுகா விவாகரத்து பத்திரத்தை படிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் ஜனனி, ரவுடிகளிடம் இருந்து தப்பித்து ஒரு இடத்திற்கு வருகிறார். அங்கு ஒருவர் நீங்கள் ஆபத்தில் இருப்பதாக தெரிகிறது, சொல்ல முடியும் என்றால் என்னிடம் கூறலாம் என்கிறார்.
அந்த நியூ என்ட்ரி நடிகர் யார் என்று பாருங்கள், அவரால் கதையில் என்ன மாற்றம் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.