மண்டபத்தில் சக்தி செய்த பிரச்சனை, ஜீவானந்தம் கேட்ட கேள்வி, குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் காலை 10 முதல் இரவு 10 வரை நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. எல்லா கதைகளும் சூப்பர் என்றாலும் இப்போது ஒரு தொடரின் கதை விறுவிறுப்பின் உச்சமாக செல்கிறது.
வேறு என்ன தொடர் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தான். குணசேகரன்-ஈஸ்வரியை தாக்கிய விவகாரம் ஒருபக்கம் இருக்க இப்போது தர்ஷன் திருமண கதைக்களம் பரபரப்பின் உச்சமாக செல்கிறது.
மண்டபத்திற்கும் குணசேகரன் வந்தாச்சு, ஆனால் பார்கவி எப்படி போலீசிடம் சிக்காமல் வந்து தர்ஷனை திருமணம் செய்வார் என தெரியவில்லை.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், மண்டபத்தில் சக்தி, தர்ஷன் குறித்து கேள்வி எழுப்புகிறார் . குணசேகரன் இதை வைத்து பிரச்சனை செய்கிறாயா என வாக்குவாதம் செய்கிறார்.
இன்னொரு ஜனனி எல்லோரும் மண்டபம் கிளம்பிவிட்டார்கள் என கூற இன்னும் திருமணத்திற்கு நாள் இருக்கிறதே அதற்குள் ஏன் சென்றார்கள் என கேள்வி எழுப்ப அந்த கும்பல் ஏதோ பிளான் செய்கிறார்கள் என ஜனனி குழம்புகிறார்.