ஈஸ்வரியை வைத்து குணசேகரன் போட்ட திட்டம், ஜனனி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் திருச்செல்வம் இயக்கத்தில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது எஎதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
குணசேகரன் மீது ஜனனி போட்ட வழக்கில் என்ன நடக்கும் என்பதற்கான கேள்வி தான் மக்களிடம் இப்போது அதிகம் உள்ளது. ஈஸ்வரி குணமானதால் அவர் கண்டிப்பாக குணசேகரன் பற்றிய உண்மையை கூறி அவருக்கு தண்டனை வாங்கி தருவார் என எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் அவர் பழைய விஷயங்கள் அனைத்தையும் மறந்ததால் அவரை தற்போது தன்பக்கம் இழுக்க எல்லா விஷயங்களையும் செய்து வருகிறார் குணசேகரன்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், ஜனனி மயக்கம் அடைந்ததால் வீட்டில் உள்ள அனைவரும் பதறுகிறார்கள்.
பின் ஜனனி, நந்தினி-ரேணுகாவிடம், நாம் எந்த சூழ்நிலையிலும் மாற மாட்டோம், நடந்ததை நடந்தது மாதிரியே சொல்வோம் என பேசினோம் அல்லவா, நாம் அப்படியே இருக்கனும் என்கிறார்.

ஈஸ்வரியை தனியாக கோவிலுக்கு அழைத்துச்சென்ற குணசேகரன் ஈஸ்வரியிடம், வக்கீல் வந்து என்ன கூறுகிறாரோ அப்படியே சொல்ல வேண்டும் என சத்தியம் வாங்குகிறார், அவரும் ஒப்புக்கொள்கிறார்.