ஜனனியை காயப்படுத்தும் ஈஸ்வரி, தம்பிகளுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
கதையில் குணசேகரன் வில்லனாக இத்தனை நாள் கெத்தாக வாழ்ந்தார், இப்போது அவரையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு இன்னொரு வில்லன் அதாவது ராணா களமிறங்கி எல்லா கிரிமினல் வேலையையும் செய்கிறார்.
ஆனால் இருவருமே எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என போராடும் ஜனனிக்கு தான் பிரச்சனை கொடுக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என தைரியமாக இருந்தவரின் நம்பிக்கையை உடைத்து உட்கார வைத்துள்ளார் இயக்குனர்.

இது போராட்ட குணம் கொண்ட பெண்களுக்கு கடும் சோகத்தை கொடுத்துள்ளது, இப்படி கதை செல்லக் கூடாது என்பது அனைவரின் விருப்பம், ஆனால் இயக்குனர் கேட்பதாக தெரியவில்லை.
புரொமோ
ஜுலை 7ற்கான எபிசோட் புரொமோவில், ஜனனி தர்ஷினி அறைக்கு வந்து அவரிடம் பேச முயற்சி செய்கிறார், ஆனால் அதற்குள் கதிர் ஈஸ்வரியை அழைத்து வந்து பிரச்சனை செய்துவிட்டார்.

ஈஸ்வரி நான் அவளின் அம்மா கூறுகிறேன், யாரும் அவளிடம் பேசக்கூடாது போய்விடுங்கள் என்கிறார், அதைக்கேட்டு ஜனனி மிகவும் கஷ்டப்படுகிறார்.
இன்னொரு பக்கம் கதிர் இப்போதே பொண்டாட்டி சொன்னதை கேட்கிறார், அவர் மாறிவிட்டால் என்ன செய்வது, உங்கள் சொத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ள கூடியவரை நீங்கள் வேகமாக தேர்வு செய்யுங்கள் என ராணா கூறுகிறார்.

இதனால் குணசேகரன் தனது சொத்தின் பவரை ராணாவிற்கு கொடுப்பதாக கூற கதிர் மற்றும் ஞானம் செம ஷாக் ஆகிறார்கள்.