கொடைக்கானலில் சக்தி போடும் ரொமான்டிக் பிளான், ஆனால்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல், கதை ஆரம்பித்த நாள் முதல் குணசேகரன் சொத்தை வைத்து தம்பிகள், அவர்களது மனைவி என தனது குடும்பத்தையே ஆட்டிப்படைத்து வந்தார். இப்போது தனது சொத்தை தம்பிகள் இருவருக்கும் பிரித்துகொடுத்துவிட்டார்.
அடுத்து தம்பிகளை அவர்களது மனைவியுடன் சேர்ந்து அவர்களை கைக்குள் கொண்டு வர கூறுகிறார்.

ஏதாவது வேலையை அவர்களுக்கு கொடுத்துக்கொண்டே இருங்கள் அப்போது தான் அவர்களை அடக்க முடியும் என ஐடியா கொடுக்கிறார். வழக்கம் போல் தம்பிகள் அண்ணன் சொல்வது வேதவாக்கு என அப்படியே செய்வதாக கூறுகிறார்கள்.
புரொமோ
ஜனனி கர்ப்பமாக ஆனது சந்தோஷம் என்றாலும் அவரது உடல்நிலை கொஞ்சம் வீக்காக இருப்பதாக மருத்துவர் கூறியதால் சக்தி அவர் மீது மிகுந்த அக்கறையோடு உள்ளார்.

ஜனகிக்காக எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறார். தற்போது அவரை அழைத்துக்கொண்டு கொடைக்கானலில் சந்தோஷமாக இருக்கலாம் என சென்றுள்ளார், ஆனால் அங்கு தேவசகாயம் உள்ளார்.
அவர் ஜனனியை கொடைக்கானலில் பார்க்க அவரது கதையை முடித்தே ஆக வேண்டும் என அவரை பின்தொடர்கிறார். இனி கதையில் என்ன நடக்குமோ பொறுத்திருந்து காண்போம்.