தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் முதல் பாக வெற்றியை தொடர்ந்து ஒளிபரப்பாகும் 2ம் பாகம் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
திருச்செல்வம் இயக்கும் இந்த தொடர் அடுத்தடுத்து பரபரப்பின் உச்சமாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த சில வாரங்களாக கதையில் தர்ஷன்-பார்கவி திருமண கதைக்களம் தான், இவர்களது திருமணம் நடக்குமா இல்லையா என்ற பரபரப்பு இருக்க கடைசியில் ஈஸ்வரி நினைத்தபடி திருமணம் நடந்தது.
இப்போது அடுத்து என்ன பிரச்சனை என்று பார்த்தால் குணசேகரன் மறைத்து வைத்துள்ள பெரிய ரகசியம் சக்திக்கு தெரிய வந்துள்ளது.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், சக்தி-ஜனனி, குணசேகரனால் ஈஸ்வரி தாக்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதாவது கிடைக்குமா என தேட ஆரம்பித்துள்ளனர்.
இன்னொரு பக்கம் சக்தி, குணசேகரனுக்கு சவால் விடும் வகையில் பேசுகிறார், அதற்கு அவர் மௌனமாக உள்ளார். இதோ புரொமோ,