குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியின் டாப் தொடராக இருக்கும் தொடர்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
கதையில் மோசமான பிளான்கள் போட்டு தனது வீட்டுப் பெண்களை அடிமைப்படுத்திய குணசேகரன் இப்போது தனது சொத்துக்களை தம்பிகளுக்கு எழுதி வைத்துவிட்டு மிகவும் அமைதியாக இருப்பது போல் காட்டப்படுகிறது.

ஆனால் தம்பிகளை தனது கைக்குள் வைத்துக்கொண்டு இப்போது ஒரு புதுப்பிளான் போட்டு வருகிறார். ஜனனி-சக்தி இல்லாமல் ஒரு பூஜை செய்ய வேண்டும் என்று தம்பிகளை வைத்து காய் நகர்த்தி வருகிறார்.

புரொமோ
ஜனனி-சக்தி இல்லாமல் பூஜை வேண்டாம் என விசாலாட்சி சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை, பூஜை நடந்தே ஆக வேண்டும் என்று இருக்கிறார்.

வீட்டுப் பெண்களும் வேறு வழியில்லாமல் அதற்கான வேலைகளை செய்து வர இடையில் அறிவுக்கரசி தனது பங்கிற்கு பிரச்சனையை துவங்கிவிட்டார்.
என் தங்கையின் வாழ்க்கைக்கு ஒரு வழி தெரியாமல் நான் இங்கே இருந்து செல்ல மாட்டேன். என் தங்கை தான் இவனுக்கு சட்டப்படி பொண்டாட்டி என பிரச்சனை செய்கிறார்.‘
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri