குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகிறது.
அப்படி பெண் அடிமை, ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை மையமாக கொண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் தான் எதிர்நீச்சல்.
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் முதல் பாகம் வெற்றிகரமாக முடிவுக்கு வர அதே வேகத்தில் 2ம் பாகம் வெளியானது.
இதில் பாதி எபிசோட் வரை குணசேகரன் ஆட்டம் செல்லாமல் போக இப்போது சைலண்டாக அவரது வேலையை தொடங்கிவிட்டார்.

புரொமோ
தனது வீட்டுப் பெண்களை மீண்டும் வீட்டிற்குள் வர வைத்து மறுபடியும் சமையல் அறைக்குள் தள்ளிவிட்டார். இதுபோதாது என்று மீண்டும் பல வேலைகளை தனது அம்மாவுடன் இணைந்து செய்கிறார்.

இன்றைய எபிசோடில் கூட குணசேகரன் அப்படி ஒரு விஷயம் செய்ய ஜனனி அதை கண்டுபிடித்துவிடுகிறார்.
இதன்மூலம் பெண்கள் அவர்களின் திட்டத்தை புரிந்துகொண்டு தைரியமாக போராடுவார்களா அல்லது சூழ்நிலை என்று கூறி சமையல் அறைக்குள்ளேயே இருப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri