கேவலமாக அதிகாரியிடம் அசிங்கப்பட்ட குணசேகரன், கதிர், ஞானம்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
குணசேகரன் என்ற வில்லனை தாண்டி இப்போது ராவணன் என்ற கொடூர வில்லன் களமிறங்கிவிட்டார், அவர் என்ன தான் செய்யப்போகிறார், அவர் போடும் திட்டம் தான் என்ன என்பது ஒன்றுமே தெரியவில்லை.

இப்போது முதல் டார்க்கெட்டாக ஜனனியை குணசேகரன் வீட்டில் இருந்து மொத்தமாக ஒதுக்கிவிட்டார். குணசேகரனை பழிவாங்க வந்தவர் ஜனனியை ஏன் டார்க்கெட் செய்கிறார் என தெரியவில்லை.
கடைசி எபிசோடில், தர்ஷினி ஜனனி தான் என்னை கடத்தினார், ராவணன் தான் என்னை காப்பாற்றினார் என கூறி விசாலாட்சிக்கு, ஜனனி, கதிருக்கு ஷாக் கொடுத்தார்.

புரொமோ
தற்போது இன்றைய எபிசோட் புரொமோவில், குணசேகரன், ராவணன், கதிர் மற்றும் ஞானம் 3 பேரும் ஒரு அதிகாரியை சந்திக்க செல்கிறார்கள்.

அப்போது அவர் இவர்கள் தானே ஆதிமுத்து குடும்பம் என கேட்க, இன்னொருவர் ஆமாம் நடுரோட்டில் ஒரு பெண்ணை வழுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தார்கள் என கூற அங்கு அசிங்கப்படுகிறார்கள்.
பின் வீட்டிற்கு வந்த குணசேகரன் ராவணனிடம் அவரது அம்மா குறித்து கேட்கிறார். அவரும் என்னை அம்மாவை ஒருவன் கொன்றுவிட்டான், அவனை பழிவாங்க தான் வந்துள்ளேன் என்கிறார்.