இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் ஒரு தொடர் எதிர்நீச்சல் தொடர்கிறது.
குணசேகரன் என்ற ஆணாதிக்கம் கொண்ட நபரின் ராஜ்ஜியமாக இந்த கதை இருக்கிறது, ஆனால் சீரியலின் கரு என்னவோ பெண்கள் எதிர்நீச்சல் போடும் கதை என்கின்றனர்.
ஜனனி, ஈஸ்வரியை தாக்கிய வீடியோவை கைப்பற்றி குணசேகரனை லாக் செய்வார் என்று பார்த்தால் இப்போது கதையே மாறிவிட்டது.

புரொமோ
சக்தியை கடத்திவைத்து ஜனனியை லாக் செய்து வெளியே அனுப்பி வைத்துவிட்டார்.
பார்கவியை வெளியே அனுப்ப நேற்றைய எபிசோடில் முயற்சி செய்தார், ஆனால் எப்படியோ நடக்கவில்லை. இன்றைய எபிசோடில், நந்தினி குணசேகரனை பார்த்து இன்னும் எத்தனை பேரை கொன்று சொத்தை பிடிங்க போறீங்க, சொத்து வெறி அடங்காதா என கோபமாக கேட்கிறார்.
அடுத்து ஜனனிக்கு எதிரான வில்லன் அணியில் இருக்கும் அறிவுக்கரசி ஜெயிலில் இருந்து வெளியாகி குணசேகரன் வீட்டிற்கு வந்துவிடுகிறார்.

குணசேகரன் சொல்லி தான் இந்த விஷயங்களை செய்தேன் என கூறுகிறார், அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்பதை பொறுத்திருந்து காண்போம். இதோ இன்றைய எபிசோட் புரொமோ,