திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
பெண்கள் எழுச்சி, சாதிக்கப் பிறந்தவர்கள் பெண்கள் என வசனம் எல்லாம் கைத்தட்டி பாராட்டும் அளவிற்கு இருந்தாலும் கதைக்களம் அப்படி அமையவில்லை என்பது தான் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களின் கவலை.
முன்பு குணசேகரன் வீட்டுப் பெண்களை அடிமைப்படுத்தி தான் மட்டுமே நன்றாக வாழ வேண்டும் என இருந்தார், அதற்காக பல வேலைகள் செய்தார். அப்போதும் அவரது வீட்டுப் பெண்கள் தான் கஷ்டப்பட்டு வந்தார்கள், கொஞ்சம் முன்னேற நினைத்தாலும் அடிமேல் அடி போட்டு வீட்டிலேயே முடக்கிவிடுகிறார்கள்.
இப்போது புதியதாக என்ட்ரி கொடுத்த ராணாவை விட குணசேகரனே மேல் போல என சொல்லும் அளவிற்கு இவரது கதாபாத்திரம் கொடூரமாக அமைந்துள்ளது.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், கதிர்வேலன் ஆதிமுத்து நம்பர் தான் என்பதை தெரிந்துகொண்ட ஜனனி வீட்டிற்கு வந்து கதிரை சரமாரியாக திட்டுகிறார்.

ஆத்திரத்தில் கதிர் அங்கிருந்த பொருளை வைத்து ஜனனி தள்ளி அடிக்கச் சென்றுள்ளார். அப்போது சக்தி தடுக்க அந்த சம்பவத்தை ஈஸ்வரி பார்த்து ஷாக் ஆகிறார்.
பின் ஜனனியை தனியாக சந்தித்த ஈஸ்வரி நீ பேசுவதை வைத்து பார்த்தால் என்னிடம் இருந்து ஏதாவது மறைக்கிறீர்களா என கேட்க ஜனனி உங்கள் மனதிற்கு என்ன தோன்றுகிறது என்கிறார்.

கடைசியாக குணசேகரன், கதிரை பார்த்து ஜனனியை அடிக்க சென்றாய் தானே அவளிடம் மன்னிப்பு கேள் என்கிறார்.
இதோ புரொமோ,
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
சொன்னதை செய்யாவிட்டால் ராஜினாமா செய்கிறேன்.., பத்திரத்தில் கையெழுத்திட்ட நாதக வேட்பாளர் IBC Tamilnadu