ஜனனிக்கு வந்த பிரச்சனை, குணசேகரன் போடும் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் தொடர்கள் எடுத்தால் எல்லாமே பெண்களை மையப்படுத்திய கதையாக தான் இருக்கும்.
அப்படி ஆணாதிக்க எண்ணம் கொண்டவர்களிடம் சிக்கி தவிக்கும், சமையல் அறையில் அடைக்கப்பட்ட பெண்களின் போராட்டமாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
இப்போது கதையில் ஜனனி கர்ப்பமாக இருக்கும் நல்ல விஷயத்தை பற்றிய கதைக்களமாக ஒளிபரப்பாகி வருகிறது.

புரொமோ
கடைசி எபிசோடில், ஜனனி கர்ப்பமாக இருக்கும் விஷயம் சந்தோஷத்தை கொடுத்தது. பின் குணசேகரன் ஏற்பாடு செய்தது போல் பெரியவர்களுக்கு திதி கொடுக்கும் விஷயமும் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிகிறது.

தற்போது இன்றைய எபிசோடின் புரொமேவில், ஜனனி மருத்துவமனைக்கு சென்று செக்கப் செய்கிறார், குழந்தை நன்றாக இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். ஆனால் உடம்பில் ஒரு பிரச்சனை இருப்பதாக கூறுகிறார்.
இன்னொரு பக்கம், குணசேகரன் தனது தம்பிகளை அழைத்து ஏதோ ஒரு புது பிளான் போடுகிறார்.