திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவி பரபரப்பின் உச்சமாக சன் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த தொடரின் கதைக்களத்தில் கடந்த சில வாரங்களாக தர்ஷன் திருமணம் யாருடன் நடக்கும் என்ற பரபரப்பு தான் சென்றது.
ஒருவழியாக தொடரில் தர்ஷன் திருமணம் பார்கவியுடன் நடந்து முடிந்துவிட்டது, குணசேகரன் தோற்ற வருத்தத்தில் உள்ளார்.

அவருக்கு துணையாக அவரது தம்பிகள் இருப்பதாக ஆதரவு கொடுக்கிறார்கள்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், குணசேகரன் தனது பீரோவில் எதையோ பரபரப்பாக தேடுகிறார், அது சக்தி எடுத்த கடிதமாக இருக்கும் என்று தான் தெரிகிறது.
பின் ஜனனி, தர்ஷன், பார்கவி என அனைவரும் ஈஸ்வரியை காண மருத்துவமனை சென்றார்கள். அங்கு மருத்துவர் ஈஸ்வரி உடல்நிலை கடந்த சில நாட்களாக சரியில்லை என கூற அனைவருமே ஷாக் ஆகிறார்கள்.

வீட்டிற்கு அனைவரும் வர வழக்கம் போல் கதிர்-ஞானம் உங்களுக்கு வீட்டில் இடம் இல்லை என கூற சண்டை தொடங்குகிறது. இதோ புரொமோ,
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri