ஜீவானந்தத்திடம் அடம் பிடிக்கும் பார்கவி, அன்புக்கரசி போட்ட டீல்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாகிறது.
குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை, அறிவுக்கரசியிடம் ஈஸ்வரி போன் சிக்கினாலும் அது இப்போது குணசேகரனிடமே சிக்கிவிட்டது.
போனில் இருந்து வீடியோ எடுக்க வந்தவரிடம் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ சிக்க அவரிடம் பணம் கேட்டு மிரட்ட பிளான் போடுகிறார்.
இதற்கு இடையில் பரபரப்பின் உச்சமாக தர்ஷன் திருமண வேலைகள் தொடங்கிவிட்டது.
புரொமோ
தர்ஷனுக்கும் பார்கவிக்கும் தான் திருமணம் நடக்க வேண்டும் என ஜனனி குழுவினர் ஒருபக்கம், தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் தான் திருமணம் என குணசேகரன் அன் கோ உழைக்கிறார்கள்.
இன்றைய எபிசோடில், பார்கவி-ஜீவானந்தத்திற்கு புலிகேசியால் ஆபத்து ஏற்படுகிறது, நான் போய் பார்க்கிறேன் என பார்கவி அடம் பிடிக்க ஜீவானந்தம் அவரை சமாதானம் செய்கிறார்.
அன்புக்கரசி புலிகேசியிடம் அவரை முடித்துவிட்டால் உனக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன் என டீல் பேசுகிறார். இதோ சீரியல் புரொமோ,