பெரிய சேதம் வரப்போகிறது, குணசேகரன் வர வைத்த ஒரு நபர்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியின் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல் தொடர்கிறது.
கோலங்கள் சீரியல் புகழ் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் தயாரான எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பின் உச்சமாக அடிமை வாழ்க்கை வாழும் பெண்களுக்கு தைரியத்தை கொடுக்கும் ஒரு தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.
2ம் பாகம் முதல் பாகம் முடிந்த வேகத்தில் தொடங்கப்பட்டது, இதில் பெண்கள் இன்னமும் குணசேகரனுடன் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், நந்தினி யாரையோ மண்டபத்திற்கு அழைத்து வர இருக்கிறார்கள் என ஜனனியிடம் கூறுகிறார், அவரும் வரட்டும் நம் மீது பயம் உள்ளது என்கிறார்.
இன்னொரு பக்கம் குணசேகரன் மாமா பெரிய சேதம் வரப்போகிறது என மண்டபத்தில் அனைவரிடத்திலும் கூற குணசேகரன் ஸ்பெஷலாக வரச் சொன்ன நபர் மண்டபத்திற்கு வருகிறார், யாரு அவர் இதோ புரொமோவில் காணுங்கள்,