திடீரென குடும்பத்திற்கு முன் கதறி கதறி அழுத சக்தி, ஆறுதல் கூறிய அண்ணன்கள்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது கதை எதை நோக்கி செல்கிறது என்றே தெரியவில்லை.
பொதுவாக எல்லா சீரியல்களிலும் வில்லன் இருந்தால் அவருக்கு எப்போவாவது அவர் செய்யும் தவறுக்கு தண்டனை கிடைக்கும், ஆனால் இந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியாயத்திற்காக போராடும் நாயகிக்கு மட்டுமே தண்டனை கிடைக்கிறது.

அநியாயம் செய்யும் வில்லன் குணசேகரனுக்கு ஒரு தண்டனையும் கிடைப்பதில்லை. இப்போது கூட ஜாமின் கேன்சல் ஆகி போலீஸ் கைது செய்வார்கள் என்று தெரிந்ததும் எங்கேயோ போய் உட்கார்ந்துள்ளார்.

புரொமோ
குணசேகரன் குடும்பத்தை அழிக்கவே சாமிக்கு கட்டு கட்ட வேண்டும் என பூஜையை செய்ய மும்முரமாக இருக்கிறார். இந்த விஷயம் அறிந்த விசாலாட்சி குணசேகரன் செய்வது தவறு, அவன் நல்லவன் இல்லை, ஜனனி இப்போது கர்ப்பமாக இருக்கிறாள், அவள் நல்லவள்.

அவளுக்காக ஒரு விசேஷம் நடத்தலாம் என தனது இரண்டு மகன்களிடம் கெஞ்சுகிறார். அவர்களும் அம்மா சொன்னதை கேட்க இப்போது கோலாகலமாக ஜனனிக்கு வளைகாப்பு நடக்கிறது.
அப்போது இவள் மிகவும் கஷ்டப்பட்டுட்டா, அவளும் குழந்தையும் நன்றாக இருந்தால் போதும் என கதறி அழுகிறார்.