ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் அடுத்தடுத்த திடுக்கிடும் கதைக்களமாக பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
இப்போது கதையில் குணசேகரன் சொத்தை தம்பிகளுக்கு எழுதி கொடுத்துவிட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளார்.

அவரது அடுத்த பிளான் என்னவாக இருக்கும் ரசிகர்கள் யோசிப்பதற்குள் கொடைக்கானல் சென்ற ஜனனி-சக்திக்கு ஆலிவர் தேவசகாயத்தால் பிரச்சனை வருகிறது.
ஆனால் சக்தி, ஜனனியை எப்படியாவது பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து சென்றுவிட வேண்டும் என போராடினார். ஜனனி இந்த போராட்டத்தில் கொஞ்சம் மயங்கி போக அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார் சக்தி.

ஸ்பெஷல் புரொமோ
இன்று வெளியாகியுள்ள சீரியலின் ஸ்பெஷல் புரொமோவில், வீட்டிற்கு சென்ற நந்தினி-ரேணுகா, நாங்கள் 4 பேரும் சேர்ந்து இனி புது வாழ்க்கையை பார்க்கப்போகிறோம் என தங்களது மாமியாரிடம் கூறி சந்தோஷப்படுகிறார்.

அடுத்த தேவசகாயம் ஒருவருக்கு போன் செய்து போலீஸ் என்னை தேடுகிறார்கள் என கூற நீ உயிருடன் இருந்தா உன்னை வைத்து இந்த Networkஐ டிராக் செய்துவிடுவார்கள். இப்போது நீ சாகவில்லை என்றால் நானே உன்னை கொன்றுவிடுவேன் என்கிறார்.
அந்த நபர் கையில் கட்டியிருக்கும் வாட்ச் பார்க்கும் போது ராணாவின் என்ட்ரியாக இருக்கும் தெரிகிறது.