குணசேகரன் பிளானில் இருந்து தப்பிக்க ராணா வலையில் சிக்கிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இத்தனை நாள் கண்ணுக்கு தெரிந்த எதிரியான குணசேகரனிடம் நியாயத்திற்காக போராடி வந்தார் ஜனனி.
2வது சீசனே ஒளிபரப்பாகிறது ஆனாலும் ஜனனியால் குணசேகரனிடம் ஜெயிக்க முடியவில்லை. இந்த போராட்டமே முடியவில்லை அதற்குள் ஜனனிக்கு கண்ணுக்கு தெரியாத எதிரி உருவாகி அவர் ஒருபக்கம் விளையாடி வருகிறார்.
ஈஸ்வரியை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் யார் பக்கம் தீர்ப்பு வரும் இந்த பிரச்சனை எப்படி முடியும் என தெரியவில்லை.

புரொமோ
இந்த வாரம் குணசேகரன் வழக்கில் நீதிமன்றம் வந்து பிரச்சனைக்கான தீர்வு தெரியும் என்று பார்த்தால் அதற்குள் நிறைய கதைக்களம் வரும் என தெரிகிறது.
அதாவது வீட்டில் இருந்தால் குணசேகரன் தன்னை எப்படியாவது லாக் செய்ய பார்ப்பார் என்று யோசித்த ஜனனி வெளியே வந்துவிட்டார். மதிவதனியை சந்தித்து இந்த வழக்கு குறித்து பேசுகிறார், அவர் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என்கிறார்.

இதற்கு இடையில் சாருபாலாவின் உறவினர் ஜனனியை சந்தித்து நீங்கள் பாதுகாப்பாக இருக்க என்னிடம் ஒரு இடம் உள்ளது என அவர்களை அங்கே அழைத்துச் செல்கிறார்.
குணசேகரனிடம் சிக்க கூடாது என்று யோசித்த ஜனனி கண்ணுக்கு தெரியாத வில்லன் ராணாவிடம் வந்து சிக்கியுள்ளார். இதோ புரொமோ,
வந்தே மாதரம் பாடல் சர்ச்சை... முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – திருமாவளவன் காட்டம்! IBC Tamilnadu